கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம்! மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா
தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் வடகொரியா தீவிரமாக இருக்கிறது.
மிகப்பெரிய இராணுவ பயிற்சி
ஆனால் இதற்கு அமெரிக்காவும், அதன் கூட்டாளியுமான தென் கொரியாவும் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இரு நாடுகளுக்கிடையேயும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய இராணுவ பயிற்சியை தொடங்கி இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடைபெறும் மிகப்பெரிய கூட்டு இராணுவ பயிற்சி இதுவாகும்.
இந்த பயிற்சி பக்கத்திலேயே இருக்கும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே வடகொரியா வழக்கம்போல தன்னுடைய ஏவுகணை பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த முறை தரையிலிருந்து அல்லாமல் நீரிலிருந்து ஏவுகணை சோதனையினை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவும், தென்கொரியாவும் கடந்த 2018ம் ஆண்டு 'சுதந்திரக் கேடயம்' எனும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி ஆண்டுக்கு 10 நாட்கள் வரை இரு நாடுகளும் போர் பயிற்சியை மேற்கொள்ளும்.
இந்த பயிற்சியில் இரு நாடுகளும் பின்பற்றி வரும் போர் தந்திரங்களை பகிர்ந்து கொள்ளும். இதேபோல ஆண்டின் பெரும்பாலான நாட்களில் தென்கொரியாவுடன் அமெரிக்க இராணுவம் ஏதாவது ஒரு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. ஒரு முறை விமான பயிற்சி என்றால் மறுபுறம் கடற்படை பயிற்சி.
ஏவுகணை சோதனை
இப்படி தொடர் பயிற்சிகளுக்கு வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து இரண்டு ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. இதுபோன்று நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணைகளை ஏவுவது இது முதல் முறையல்ல. கடந்த 2016ம் ஆண்டிலிருந்து இதுபோன்ற ஏவுகணைகளை வடகொரியா ஏவி வருகிறது. இந்த ஏவுகணைகள் பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாகும்.
இது கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்டதாகும். தற்போது ஏவப்பட்டுள்ள ஏவுகணையானது சுமார் 1,500 கி.மீ தூரம் வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாகும். 1,500 கி.மீ எனில் அமெரிக்காவின் நேச நாடான ஜப்பான் இந்த வரம்புக்குள்தான் வருகிறது.
அதேபோல அமெரிக்காவின் மிக முக்கிய இராணுவ தங்களும் இந்த எல்லைக்குள்தான் வருகிறது. இது தவிர தென்கொரிய, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை வடகொரியா தொடர்ந்து கண்டித்து வருகிறது. ஆனால் இந்த நீர்மூழ்கி ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கடும் கண்டம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கைகள் நேச நாடுகளை அச்சுறுத்தும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளது. ஏற்கெனவே அணு ஆயதங்களை பயன்படுத்துவதாக வடகொரியா மீது குற்றஞ்சாட்டுள்ளது. எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சில வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது.