நோர்த் யோர்க்கில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு நேர்ந்த கதி; சந்தேக நபர் தப்பியோட்டம்
கனடாவின் நோர்த் யோர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மதியம் 2 மணிக்குப் பிறகு, ஸ்டீல்ஸ் அவென்யூ வெஸ்ட் மற்றும் வெஸ்டன் ரோடுக்கு அருகில் உள்ள சிக்னெட் டிரைவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் உடலில் பல தடவைகள் சுடப்பட்டதாகவும், அவசர சேவைகள் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்குள்ளானரவர் 40 வயதானவர் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், சாம்பல் நிற எஸ்யூவியின் காரில் இருந்து இறங்கி பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பலமுறை சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வணிக வளாகம் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கண்ணாடி கதவை உடைத்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.