மூக்கில் இருந்து இரத்தம் வழியும் தொற்று... அதிகரிக்கும் பலி எண்ணிக்கையால் அச்சம்
உண்ணி மூலம் பரவுகிற புதிய தொற்றால் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Crimean-Congo hemorrhagic காய்ச்சல் என அறியப்படும் இந்த நோயால் மூக்கு உட்பட கடுமையான உள் மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு ஏற்படுகிறது.
ஈராக்கில் ஜனவரியில் இருந்து இதுவரை 120 பேர்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டதுடன், குறைந்தது 18 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த தொற்றானது முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பரவுகிறது என அச்சம் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, ஈராக்கின் தெற்கு மாகாணமான தி கரை மையமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக உண்ணிகள் ஊடாக இந்த பாதிப்பு ஏற்படும் என்றாலும், விலங்குகளின் இரத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த நோய் பரவுகிறது என நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி கால்நடைகளுடன் அல்லது இறைச்சிக் கூடங்களில் வேலை செய்கிறவர்களுக்கே இந்த நோய் பாதிப்பு அதிகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.