சுயநினைவை இழந்தவருடன் பேச தயாராக இல்லை; டொனால்ட் ட்ரம்ப்
எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பபேசிய ட்ரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் ட்ரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விபரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
அதோடு ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார். இவ்வாறான நிலையில் சுயநினைவை இழந்தவருடன் பேச தயாராக இல்லை டிரம்ப் தெரிவித்துள்ளார்.