நோவா ஸ்கொட்டியாவில் அத்தியாவசியமற்ற பயணத்திற்கு தடை
அத்தியாவசியமற்ற பயணங்களை தடுக்கும் நோக்கில் நோவா ஸ்கோடியாவின் மாகாண எல்லைகள் திங்களன்று மூடப்பட்டன.
கொரோனா பரவலை அடுத்தே நோவா ஸ்கொட்டியா சுகாதாரத்துறை குறித்த முடிவுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் மாணவர்களை அழைத்துச் செல்வது அல்லது விட்டுசெல்வது என்ற முடிவுடன் இருந்த மாகாணத்திற்கு வெளியே உள்ள பெற்றோர்களுக்கும் பொருந்தும்.
மேலும் மிகுந்த பாதிப்புள்ள பகுதியில் இருந்து மாகாணத்திற்குள் திரும்பும் தொழிலாளர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.
நோவா ஸ்கோடியாவின் பயண விதிகள் குறைந்தது மாத இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும், பெரும்பாலான பயணிகளுக்கான விண்ணப்ப செயல்முறை மே 14 க்குள் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.