உயிருக்கு போராடும் அப்பா! எதுவுமே செய்ய முடியவில்லையே? கனடாவில் இருந்து கண்ணீர் விடும் மகன்
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன, குறிப்பாக கனடா 10 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பயணத்தடை மற்றும் விமான போக்குவரத்துக்கு சேவைக்கு தடை விதித்துள்ளன, இந்நிலையில் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் வசிக்கும் தங்களது குடும்பத்தினர் என்ன செய்கிறார்களா? அவர்களுக்கு உதவாத நிலையில் இருக்கிறோம்? என ஒவ்வொரு நாளும் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
அப்படியான ஒரு சூழலில் தான் வசிக்கிறார் Ravin Murugan, கனடாவில் நர்ஸாக பணியாற்றும் Ravin Murugan தன்னுடைய பெற்றோருக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதை எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய தாய்க்கும், தந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், கடந்த புதனன்று, பணியில் இருந்த Ravin Murugan-க்கு அவரது தந்தையிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.
நெஞ்சமெல்லாம் பாரமாக, மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதாக அழுது கொண்டே தெரிவித்ததுடன், தன்னுடைய படுக்கையில் யாரோ அமர்ந்திருப்பதாகவும், தன்னால் அதை உணர முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த நிமிடமே தாயிடமிருந்து வந்த அழைப்பில், கொரோனா பாசிடிவ் என முடிவு வந்திருப்பதாக கூறியுள்ளார், இதை கேட்டதும் தன் நெஞ்சே வெடித்தது போன்று உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Ravin Murugan.
தந்தையின் 15 சதவீத நுரையீரல் முழுமையாக சேதமடைந்து விட்டதாக கூறும் Ravin Murugan, தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனை Nova Scotians மக்களிடம் தெரிவித்த போது, தன்னுடைய குடும்பத்துக்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அக்கறை தன்னை நெகிழச் செய்ததாக தெரிவிக்கிறார்.
மேலும் மருத்துவ செலவுகளுக்கு ஆயிரம் டொலர்கள் வழங்கியதாக கூறும் Ravin Murugan, கடினமான சூழலில் கனடா மக்களின் அன்பு தனக்கு உறுதுணையாக இருப்பதாகவும், விரைவில் தன்னுடைய பெற்றோர் நலம்பெற்று வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.