பிறந்த நாள் விழாவிற்கு ஹரி - மேகன் தம்பதியை அழைக்காத ஒபாமா! வெளியான காரணம்
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவின் பிறந்ததின நிகழ்வுகள் கடந்த 3 நாட்களாக அவரது பண்ணை விட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வில் 300க்கும் அதிகமாக பல முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டுள்ள நிலையில். பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளை ஒபாமா அழைக்கவில்லை என கூறப்படுகின்றது.
ஹரி மற்றும் மேகன் தம்பதிகள் ஒபாமாவின் மிக மிக நருங்கிய நட்ப்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் என்பது யாவரும் அறிந்த விடையம். தனது பிறந்தநாள் விழாவிற்கு அவர்களை தான் ஒபாமா முதலில் அழைத்திருக்க வேண்டும் . ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை.இதனால் பார்டிக்கு வந்த பலரும் குழப்பிபோய் உள்ளனராம்.
இந்நிலையில் தனது சொந்தக் குடும்பம் மீதே சேறு பூசியதன் காரணமாகவே ஹரியையும் மேகனையும் ஒபாமா தள்ளி வைத்திருக்க வேண்டுமென அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
இதேவேளை அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பங்களை மற்றும் உறவினர்களை மதிக்கும் ஒரு நபர் என்றும், தனது குடும்ப நபர்களை பற்றி அவதூறு பேசியதன் காரண்மாகவே அவர் இளவரசர் ஹரியை நிகழ்விற்கு அழைக்கவில்லை என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.