இந்தியா கோர ரயில் விபத்து; இதயத்தை உடைத்துவிட்டது; பிரதமர் ஜஸ்டின் டிருடோ இரங்கல்
இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் ரயில் விபத்தின் காட்சிகளை பார்த்து தன் இதயம் நெருங்கி போய் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்தின் படங்கள் தனது இதயத்தை உடைத்துவிட்டதாக “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
காயமடைந்தவர்களை என் எண்ணங்களில் வைத்திருக்கிறேன். இந்த கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள், ”என்று ட்ரூடோ ஒரு ட்வீட்டில் கூறினார்.
The images and reports of the train crash in Odisha, India break my heart. I’m sending my deepest condolences to those who lost loved ones, and I’m keeping the injured in my thoughts. At this difficult time, Canadians are standing with the people of India.
— Justin Trudeau (@JustinTrudeau) June 3, 2023
அதேவேளை இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் நடந்த பேரழிவுகரமான ரயில் விபத்தைத் தொடர்ந்து எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எண்ணங்கள் காயமடைந்த பலரைப் பற்றியும், அவர்களுக்கு உதவுவதற்காக அவசரகாலப் பணியாளர்கள் பணியாற்றுவது பற்றியும் உள்ளது,” என்று ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.