ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
இந்தியாவில் பெரிய விபத்தாக பார்க்கப்படும் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா - பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த 2 ஆம் திகதி 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 288 பேர் பலியாகியுள்ளதுடன்,1 000 ற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், இந்த ரயில் விபத்தில் படுகாயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த ஒருவர் ஜுன் 13 அன்று உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்து.

மேலும் இன்றைய தினம் பீகாரை சேர்ந்த மேலுமொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இது வரையிலும் 80 ற்கும் அதிகமான உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.