நாட்டுக்கு செல்ல அச்சம் வெளியிட்ட ஒலிம்பிக் வீராங்கனை; போலந்தின் மனிதாபிமானம்
பெலாரஸ் (Belarus)நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை கிரிஸ்டினா சிமானுஸ்காயாவுக்கு(Kryststina Tsimanouskaya) போலந்து அரசாங்கத்தினால் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளதாக அந் நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் திங்களன்று உறுதிபடுத்தினார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தேசிய பயிற்சியாளர் ஊழியர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து தனது அணியின் விருப்பத்திற்கு மாறாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 24 வயதான சிமானுஸ்காயா (Kryststina Tsimanouskaya) ஞாயிற்றுக்கிழமை டோக்கியோவிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.
அத்துடன் பெலாரஸுக்குத் திரும்பினால் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவர் பின்னர் ஜப்பானிய பொலிசாரின் பாதுகாப்பை நாடியதுடன், திங்களன்று ஜப்பானின் தலைநகரில் உள்ள போலந்தின் தூதரகத்திற்கு சென்றார்.
தூதரகத்தில் டோக்கியோவில் உள்ள போலந்து இராஜதந்திரிகளுடன் சிமானுஸ்காயா(Kryststina Tsimanouskaya) நேரடியாக தொடர்புகளை பேணி கலந்துரையாடிய பின்னர், அவருக்கு மனிதாபிமான விசா அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக போலந்தின் துணை வெளியுறவு அமைச்சர் மார்சின் பிரைடாக்ஸ் (Marcin Paradox) கூறினார்.
அத்துடன் சிமானுஸ்காயா (Kryststina Tsimanouskaya) விளையாட்டு வாழ்க்கையை தொடர போலாந்து தன்னாலான தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
https://canadamirror.com/article/do-not-send-to-my-country-cataract-athlete-1627909392