கென்யாவில் கொலை செய்யப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை
கென்யாவின் மெய்வல்லுநர் வீராங்கனை எக்னஸ் டிராபி அவரது வீட்டில் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரது கணவரால் கூரிய ஆயுதத்தினைக் கொண்டு அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் கொலைசெய்யப்பட்ட வீராங்கனையின் கணவர் தலைமறைவாகியுள்ளர்த்தகவும் பொலிஸார் அவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவர் இரண்டு முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதுடன் அண்மையில் இடம்பெற்ற ஒலிம்பிக் 5,000 மீற்றர் ஓட்டப்போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.