கனடாவிலும் பரவியது ஒமிக்ரான் வைரஸ்.. 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்ல பயணதடை அறிவிப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தற்போது கனடாலும் இவ்வைரஸ் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓமிக்ரான் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனடா தடை விதித்திருந்தது. ஆனால் அதில் நைஜீரியா இடம்பெறவில்லை.
இந்த சூழலில் சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நபர்களிடம் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் நோயின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
பொது சுகாதார அதிகாரிகள் அவர்களின் நெருக்கமாக இருந்தவர்களின் தகவல்களை சேகரித்து வருகின்றனர் எனவும் தற்போது இரண்டு நோயாளிகளும் தனிமையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பாதிப்புகளும் தலைநகர் ஒட்டாவாவில் இருப்பதை ஒன்ராறியோ அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா நோயாளிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பு ஒன்டாரியோவில் கவலைக்குரியது, கனடாவின் பொது சுகாதார முகமையால் இன்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு மற்றும் சோதனை தொடர்வதால், இந்த மாறுபாட்டின் பிற வழக்குகள் கனடாவில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே ஒமிக்ரான் பாதிப்பு காரணமக அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.