கனேடிய நகரம் ஒன்றின் மொத்த மக்களும் வெளியேற விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காட்டுத்தீ சூழும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Merritt நகர மக்கள் மொத்தமாக வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவசர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை குறித்த வெளியேறும் எச்சரிக்கையானது விடுக்கப்பட்டது. உயிருக்கும் உடமைக:ளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் இருப்பதாக உறுதி செய்துள்ள அதிகாரிகள் தரப்பு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இதனால் Merritt நகரில் குடியிருக்கும் 7,000 மக்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எந்த நேரத்திலும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்படலாம் எனவும், மக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் ஹொப் மற்றும் Merritt நகரங்களுக்கு இடையேயான பிரதான சாலை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மூடப்பட்டுள்ள பிரதனசாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று தெரியவில்லை, ஆனால் இந்த நேரத்தில் அனைவரும் அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.