மொன்றியலில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி! 6 பேரைக் காணவில்லை
மொன்றியலில் இடம்பெற்ற பாரிய தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஆறு பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்து குறித்த எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிக்கவில்லையா அல்லது அவை கேட்கவில்லையா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.