கனடாவில் சாலையில் இடம்பெற்ற கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த நபர்!
கனடாவில் சாலையில் நடந்து சென்ற நபர் மீது லொறி மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ரொறன்ரோவின் நார்த் யார்க்கில் தான் இந்த சம்பவம் வியாழன் மதியம் நடந்துள்ளது.
அங்குள்ள கட்டுமான தளம் அருகில் நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லொறி அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவசர உதவி குழுவினர் அவரின் உயிரை காப்பாற்ற பெரிதும் முயன்றனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் லொறியை இயக்கிய ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே இருந்த நிலையில் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.