ஒன்றாரியோ வாடகை அதிகரிப்பு குறித்த அறிவிப்பு
ஒன்றாரியோ வாடகை தொகை அதிகரிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாகாணத்தில் வருடாந்த வாடகைத் தொகை அதிகரிப்பு உச்ச வரம்பு 2.5 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் இது தொடர்பிலான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நாட்டில் பணவீக்கம் 3.1 வீதமாக காணப்படும் நிலையில், ஒன்றாரியோ மாகாணத்தின் வாடகைத் தொகை அதிகரிப்பு உச்ச வரம்பு 2.5 வீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வாடகைத் தொகை அதிகரிப்பு குறித்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் அனைத்து மாகாணங்களை விடவும் ஒன்றாரியோவில் வாடகைத் தொகை குறைவாக காணப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் வாடகைத் தொகை அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.