ஒன்றாரியோ வைத்தியசாலைகளில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாடு!
ஒன்றாரியோ மாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளர்களைப் போன்றே, சுகாதாரப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாள் தோறும் நூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காத நிலைமை காணப்படுகின்றது என ரொறன்ரோ பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தலைவர் கெவின் சுமித் (Kevin Sumith) தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் இருப்பதனால் சிகிச்சை வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தில் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தலில் உள்ள தொற்றுறுதியாளர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.