அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை உடனடியாக நிறுத்திய ஒன்ராறியோ!
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக கனடாவின் ஒன்ராறியோ மாநில அரசு அறிவித்துள்ளது. ச
மீபத்தில் அரிய இரத்தக் கட்டிகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஒன்ராறியோ மாகாணம் அஸ்ட்ராஜெனேகா கோவிட் -19 தடுப்பூசியை முதல் ஷாட்டாக விநியோகிக்கப்படுவதை உடனடியாக "மிகுந்த எச்சரிக்கையுடன்" இடைநிறுத்துகிறது என்று கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ மாகாணத்தில் மார்ச் மாத தொடக்கத்திலிருந்து 650,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியின் 202,000-க்கும் மேற்பட்ட ஷாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஒன்ராறியோவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 66,000 பேரில் ஒருவருக்கும், கனடா முழுவதிலும் 55,000 பேரில் ஒருவருக்கும் Vaccine-induced thrombotic thrombocytopenia அல்லது VITT எனும் அரிய இரத்தக் கட்டிகள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால், ஆஸ்ட்ரஜனிகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதை உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கை பின்பற்றப்படுகிறது என டேவிட் வில்லியம்ஸ் (David Williams) தெரிவித்துள்ளார்.