கனடாவில் 3 வார இடைவெளியில் 2 தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர்
கனடாவில் நபர் ஒருவர், அடுத்து அடுத்து இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.
மூன்று வார கால இடைவெளியில் இரண்டு தடவைகள் பெருந்தொகை பணப் பரிசு வென்றெடுத்துள்ளார்.
உலகின் உச்சத்தில் இருப்பதாக தாம் உணர்வதாக பரிசு வென்றெடுத்த ரயான் ஒட்மான் தெரிவிக்கின்றார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 180,000 டொலர் பரிசு வென்றெடுத்திருந்தார்.
அதன் பின்னர் ஜனவரி மாதம் 17ம் திகதி நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுத்துள்ளார்.
இதன்படி, இரண்டு லொத்தர் சீட்டிலுப்பில் மொத்தமாக 1180000 டொலர்களை பரிசுத் தொகைகளாக வென்றெடுத்துள்ளார்.
இரண்டு தடவைகள் அடுத்து அடுத்து இவ்வாறு பரிசு வென்றெடுக்க கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், இது தமக்கு ஓர் இன்ப அதிர்ச்சியாகவே காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த பரிசுப் பணத்தைக் கொண்டு பயணங்கள் செய்ய இருப்பதாகவும் முதலீடு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.