கனேடிய மாகாணமொன்றில் ஜூன் மாதத்துக்கு பிறகு 400ஐ தாண்டிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை
கனேடிய மாகாணமாக ஒன்ராறியோவில், ஜூன் மாதத்துக்குப் பிறகு முதன்முறையாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.
423 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆறு பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரொரன்றோவில் 109 பேருக்கும், யார்க் பகுதியில் 57 பேருக்கும், பீல் பகுதியில் 51 பேருக்கும், ஹாமில்ட்டன் பகுதியில் 42 பேருக்கும், விண்ட்சர் எசெக்ஸ் பகுதியில் 29 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Christine Elliott தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் 115 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்கள், 55 பேருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.