ஜெனின் நகர மக்களுக்கு எதிரான பகிரங்க யுத்தம்; 9 பலஸ்தீனியர்கள் பலி
மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய பாரிய முற்றுகையில் 9 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்த முற்றுகையில் நூற்றுக்கணக்கான துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டதுடன், வான்வழித் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. கடந்த பல வருடங்களில் இஸ்ரேலிப் படையினர் நடத்திய மிகப் பெரிய முற்றுகை இது என கூறப்படுகின்றது.
விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை
முற்றுகைக்கு கவச வாகன்கள், இராணுவ புல்டோசர்கள், ஆளில்லா விமானங்களும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில் 'விரிவான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை முயற்சி' இது என இஸ்லேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை தாக்குதல் ஜெனின் நகர மக்களுக்கு எதிரான பகிரங்க யுத்தம் என பலஸ்தீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.