அமெரிக்காவின் தபால் நிலையத்தில் சக ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர்
அமெரிக்காவின் டென்னிஸி மாகாணம் மெம்பிஸ் நகரின் கிழக்கு லேமர் கேரியர் அனெக்ஸ் பகுதியில் தபால் நிலையம் ஒன்றுள்ளது.
இதில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல பணியாற்றி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அதே அலுவலத்தில் பணியாற்றி வந்த மாற்றிற் ஊழியர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சகா ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிசூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் குறித்த நபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.