சமூக ஊடகங்களில் போலி தொழில்வாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை
கனடாவில் சமூக ஊடகங்களின் வாயிலாக போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்கள் செய்யப்பட்டு மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஒன்றாரியோ மாகாண போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சித்திரம் வரைவதற்கு புகைப்படங்களை வழங்கினால் அதற்கு கொடுப்பனவு வழங்குவதாக கூறி விளம்பரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுக்கல் வாங்கல்களில் பல்வேறு மோசடிகள் இடம் பெறுவதாகவும் வேறும் சட்ட விரோத செயற்பாடுகளுடன் இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே இவ்வாறு விளம்பரங்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் இவ்வாறான விளம்பரங்களின் மூலம் பொருளாதார நிதி நட்டங்கள் ஏற்பட கூடும் எனவும் நிதிச் சலவை போன்ற பாரதூரமான குற்றச் செயல்களுடன் தொடர்பு பட வேண்டும் எனவும் நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த மோசடிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.