மல்லையா குடும்பத்தார் தங்கியுள்ள பங்களாவை கைப்பற்ற உத்தரவு
லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை கடனுக்காக கைப்பற்ற பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மல்லையாவின் குடும்பத்தினர் வெளியேற்றப்பட உள்ளனர்.
பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான பங்களாவில் மல்லையா குடும்பம் வசித்து வருகிறது. 2012 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள UBS நிறுவனத்திடம் 20 மில்லியனுக்கு பங்களா அடமானம் வைக்கப்பட்டது. இதற்கான நிலுவைத் தொகை செலுத்தாததால் தொடரப்பட்ட வழக்கில் பங்களாவை ஜப்தி செய்ய இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கி கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வருவதற்கான விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.