இந்த நிலை யாருக்கும் வரவேண்டாம்: 10 வயது மகள் குறித்து கதறும் கனேடிய தந்தை
ஒன்ராறியோவின் வாகன் பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பலியான 10 வயது சிறுமி தொடர்பில் அவரது தந்தை உருக்கமாக பேசியுள்ளார்.
வாகன் பகுதியில் 2 மாதங்களுக்கு முன்னர் சாலையில் வாகனம் மோதி பலியான 10 வயது Nikita Belykh நினைவாக குடும்பத்தினர் அஞ்சலி கூட்டம் ஒன்றை வியாழக்கிழமை ஏற்பாடு செய்தனர்.
குறித்த நிகழ்வில் பேசிய சிறுமியின் தந்தை, தங்கள் குடும்பம் அனுபவிக்கும் இந்த மோசமான நிலை எந்த ஒருவருக்கும் வரவேண்டாம் என்றார். செப்டம்பர் 1ம் திகதி, தமது இருசக்கர வாகனத்தில் சாலையோரத்தில் சென்றுகொண்டிருந்த சிறுமியை வாகனம் ஒன்று மோதிவிட்டு சென்றது.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தில் 10 வயதான சிறுமி Nikita Belykh கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் தற்போது விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி மீது பல மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக சிறுமியின் குடும்பம் தெரிவித்துள்ளது.