கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84 சதவிகிதத்தினர் இவர்கள்தான்: ஆல்பர்ட்டா மருத்துவர்கள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 84 சதவிகிதம் பேரும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள்தான் என ஆல்பர்ட்டா மாகாண மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மாகாண மருத்துவர்கள் பலர், மாகாணத்தில் கொரோனா உச்ச கட்டத்தை அடைந்துள்ளது என்று எச்சரித்துள்ள நிலையில், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையாலும் உயிரிழப்புகளினாலும் மருத்துவமனைகள் போராடி வருகின்றன.
நேற்றைய நிலவரப்படி 679பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவே நேற்று முன் தினம் 647ஆக இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மாகாணத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். புதன்கிழமை பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆகும்.
இந்நிலையில், பலியானவர்களில் 84 சதவிகிதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் என ஆல்பர்ட்டா மாகாணம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.