அமெரிக்காவில் மீண்டுமொரு பகீர் சம்பவம்! 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற பொலிஸார்
அமெரிக்காவில் ரோந்து வாகனம் மீது காரை கொண்டு மோதிய 13 வயது சிறுவனை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் பகுதியில் கார் திருடப்பட்டு விட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் அங்கு வந்த வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டனர்.
எனினும் , அந்த கார் வேகமாக சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து காரில் மோதியது. இதையடுத்து, கார் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தான். காரில் இருந்த மேலும் 2 சிறுவர்கள் எந்த காயமுமின்றி உயிர் தப்பினர்.
இந்நிலையில் சிறுவன் ஓட்டிவந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது தான் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.