லாகூர் வான் பரப்பை மூடுவதற்கான பாகிஸ்தான் அரசு நடவடிக்கை
வணிக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் வகையில் தங்களது வான் பரப்பை மூடுவதற்குப் பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
லாஹுர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் வகையில் வான் பரப்பு மூடப்பட்டுள்ளது.
எனினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என பாகிஸ்தான் விமான நிலைய ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து அனைத்து விமானப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் தங்களது வான்வெளியை 48 மணி நேரம் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.