பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு; பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகர் மசூதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்னிக்கை 30 என முன்பு தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர்.
இதனையடுத்து அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியதில் 45 பேர் உடல் சிதறி பலியானதுடன் 65 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பதுடன், மசூதியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
பாகிஸ்தானில்இன்று இடம்பெற்ற கொடூர தாக்குதல்; 30 பேர் பலி