இருளில் மூழ்கிய பாகிஸ்தான் ; பரிதவிக்கும் மக்கள்!
பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டு உள்ளதனால் மக்கள் பெரும் கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி அந்நாட்டின் மின்துறைக்கான செய்தி தொடர்பாளர் இம்ரான் ராணா டுவிட்டரில் இன்று வெளியிட்ட பதிவில்,
நாட்டின் வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து உள்ளார்.
இதன்படி, கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஜியோ நியூஸ் தெரிவித்து உள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணியில் இருந்து நாடு முழுவதும் மின்வினியோக துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு பத்திரிகையாளர் ஆசாத் அலி தூர் டுவிட்டரில் தெரிவித்து பலூசிஸ்தானில் குவெட்டா உள்பட 22 மாவட்டங்களில் மின்வினியோகம் தடைப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகள் நீடித்து வருகின்றது.
அதேவேளை கடந்த ஆண்டு அக்டோபரில், கராச்சி, லாகூர் உள்பட மாகாண தலைநகரங்களில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.