ட்ரம்பிற்கு நோபல் அமைதி பரிசு வழங்க வேண்டுமென பரிந்துரை செய்த நாடு
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோபல் அமைதி பரிசுக்காக பரிந்துரைக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட மோதலை சமாதானமாக்கியதற்காக இந்த பரிசிற்காக பரிந்துரை செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமாபாத் மற்றும் டெல்லி இரண்டையும் நுட்பமாக சமாளித்து, மிகக் குறுகிய காலத்தில் பதற்றமான சூழலை அமைதியாக்கியதில் ட்ரம்ப் முக்கிய பங்கு வகித்தார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அவரை ஒரு உண்மையான அமைதித் தூதராக மாற்றியுள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் அணு போரை தடுத்தேன்; கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் யாரும் எனக்கு பாராட்டு வழங்கவில்லை,” என ட்ரம்ப் கடந்த காலங்களில்,கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ட்ரம்பின் தாக்கத்தை ஒப்புக்கொள்ளாமல், பாகிஸ்தான் மற்றும் இந்திய இரு ராணுவங்களுக்கிடையில் நடைபெற்ற நேரடி கலந்துரையாடலே, நிலைமைக்கு தீர்வாக அமைந்ததாக வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான், அமெரிக்காவை ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளது.
இந்த பரிந்துரையை முன்னிலைப்படுத்திய பாகிஸ்தானுக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, காசா விவகாரத்தில் இஸ்ரேலை ஆதரித்த ட்ரம்புக்கு அமைதிப் பரிசு வழங்குவது தவறான செய்தியையே உருவாக்கும் என பல மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.