பாகிஸ்தான் ரயில் விபத்து: 65 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை
பாகிஸ்தானில் திங்கள்கிழமை நேரிட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: கோத்கி மாவட்டத்தில் திங்கள்கிழமை ரயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் முடிவடைந்துவிட்டன. அந்தப் பகுதி ரயில் பாதையில் சேதமடைந்த 17 ரயில் பெட்டிகளும் அதன் என்ஜினும் அங்கிருந்து அகற்றப்பட்டன.
அதையடுத்து, அந்த ரயில் பாதை போக்குவரத்துக்குத் தயாரானது. இந்தச் சூழலில், விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 65-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதவிர, விபத்தில் 100-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்ததாக போலீஸாா் கூறினா்.
காயமடைந்தவா்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவா்கள் கூறினா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கராச்சியிலிருந்து சா்கோதாவை நோக்கி திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த மில்லத் விரைவு ரயில், கோத்கி மாவட்டம், தாக்ரி நகா் அருகே தடம் புரண்டது.
அப்போது எதிரே ராவல்பிண்டியிலிருந்து கராச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த சா் சையத் விரைவு ரயில் அதன் மீது மோதி பயங்கர விபத்து நேரிட்டது.