கொதிக்கும் வாகனத்தினுள் இருந்து மீட்கப்பட்ட பிஞ்சு குழந்தை: பெற்றோர் மீது பாய்ந்த வழக்கு
மிசிசாகா பகுதியில் கொதிக்கும் வாகனத்தினுள் இருந்து பிஞ்சு குழந்தை ஒன்று மீட்கப்பட்ட விவகாரத்தில், அதன் பெற்றோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மிசிசாகா பகுதியில் நேற்று நண்பகல் சுமார் 12.30 மணியளவில் வாகனம் ஒன்றில் இருந்து பிஞ்சு குழந்தை ஒன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
அந்த வாகனத்தின் ஜன்னல்கள் மொத்தமாக மூடப்பட்டிருந்ததுடன், கதவுகளும் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்தே அதிகாரிகள் குழந்தையை மீட்டுள்ளனர்.
சுமார் அரை மணி நேரம் அந்த பிஞ்சு குழந்தை கொதிக்கும் அந்த வாகனத்தினுள் அவதிப்பட்டிருக்கும் என்றே பீல் பிராந்திய முதலுதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குழந்த மீட்கப்பட்டதும், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிசார், குறித்த குழந்தையின் பெற்றோர் மீது வழக்குப் பதிய இருப்பதாக குறிப்பிட்டனர்.
குழந்தைக்கு போதிய அக்கறை செலுத்தாமை, கைவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் 28 மற்றும் 27 வயதுடைய அந்த தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டு, பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.