இந்த முடிவை என்னால் ஏற்க முடியவில்லை: பெற்றோர் தொடர்பில் கண்கலங்கிய கனேடிய பெண்
ரொறன்ரோவின் Roncesvalles பகுதியில் சாலை விபத்தில் சிக்கி பலியான தம்பதி தொடர்பில் அவரது மகள் கண்கலங்கியுள்ளார்.
தமது பெற்றோருக்கு இப்படியான ஒரு முடிவு ஏற்படும் என தாம் நினைத்திருக்கவில்லை என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை நேரம் Roncesvalles பகுதியில் 71 வயதான Valdemar Avila மற்றும் அவரது மனைவி 69 வயதான Fatima Avila ஆகியோர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், 38 வயதான நபர் தமது BMW காரில் அதிக வேகத்தில் சென்றதாகவும், அந்த வாகனம் மோதியே குறித்த தம்பதி சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தின் தாக்கத்தில் இன்னும் மூன்று வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய நபர் உட்பட மூவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பேசிய Ashley Avila, நடந்த சம்பவம் நெஞ்சை நொறுக்குவதாக உள்ளது என்றார். மேலும், எனது பிள்ளைகள் வளர்வதை காண வேண்டும் என ஆசித்தவர்கள், சட்டென்று மறைந்துள்ளது தங்க முடியாத துயரம் என்றார்.
அவர்களுக்கு இப்படியான ஒரு முடிவு ஏற்பட்டிருக்க கூடாது என்றே தாம் நம்புவதாக Ashley Avila கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் இதுவரை வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.