பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு... பெற்றோர் தொடர்பில் கைதான ரொறன்ரோ இளைஞர்
ஸ்கார்பரோவில் பெற்றோரை கொலை செய்த வழக்கில் 26 வயது ரொறன்ரோ இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் ரொறன்ரோ பொலிசார் வெளியிட்ட தகவலில், ஞாயிறன்று இரவு சுமார் 8 மணியளவில் ஸ்கார்பரோ பகுதியில் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், ஸ்கார்பரோ கோல்ஃப் கிளப் சாலை மற்றும் கிங்ஸ்டன் சாலையின் வடக்கே அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து இரு சடலங்களை கைப்பற்றியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தம்பதி எனவும், 65 வயதான லினெட் சேகுவேரா மற்றும் 68 வயதான பிரான்சிஸ் சேகுவேரா என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் 26 வயதான அவர்களது மகன் கைல் சேகுவேரா என்பவரை கைது செய்துள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதிப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உயிருக்கு போராடிய நிலையிலேயே இருவரும் மரணமடைந்துள்ளதாகவும், உடற்கூராய்வுக்கு பின்னரே மேலதிக தகவல் வெளிவரும் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.