மாடியிலிருந்து குழந்தைகளை தூக்கி வீசிய பெற்றோர்கள்
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டியில் உள்ள 16 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அஸ்தானா, கஜகஸ்தான் நாட்டில் 16 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து தீயை அணைத்தனர்.
அப்போது 5வது மற்றும் 6வது தளத்தில் இருந்த சிலர் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து கீழே வீசியதோடு தாங்களும் மாடிகளில் இருந்து குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை கீழே நின்றிருந்த பொதுமக்கள் போர்வை மற்றும் மெத்தைகள் கொண்டு அவர்களை லாவகமாகப் பிடித்து காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.