பாரிஸில் வெற்றிகரமாக பறந்த மின்சார பறக்கும் டாக்சி!
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Volocopter நிறுவனம் மின்சார ஏர் டாக்சியை வெற்றிகரமாக செலுத்தியது.
Le Bourget விமானநிலையத்தில் இந்த பறக்கும் டாக்சி 3நிமிடங்கள் வானில் பறந்த பின்னர் தரை இறங்கியது. 30 கிலோ மீட்டர் வேகத்திலும், 500 மீட்டர் பரப்பளவிலும் இந்த சோதனை நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் யாருமின்றி சோதனை நடைபெற்றதாக Volocopter நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மின்சார பறக்கும் டாக்சிகள் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கமெனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.