பிரபல நாட்டில் விபத்துக்குள்ளான பயணிகள் படகு: இதுவரை 27 பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு 70 பயணிகளுடன் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இதுவரையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொட்ர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏரியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்தது. இதனால், பயணிகள் அனைவரும் படகின் ஒரு பக்கத்தில் குவிந்தனர்.
ஒரு பக்கத்தில் எடை அதிகரித்ததால் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் அனைவரும் ஏரியில் மூழ்கினர்.
இந்த விபத்து தொடர்பில் தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் இதுவரை 40 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.