கடவுச்சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க 100 டொலர் அறவீடு?
கனடாவில், கடவுச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க கட்டணம் அறவீடு செய்யப்படுகின்றது. கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளது.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாதவர்கள், வேறும் நபர்களை வரிசையில் காத்திருக்க செய்து அவர்களுக்கு கட்டணம் செலுத்துகின்றனர்.
இது தொடர்பில் இணைய தளமொன்றில் விளம்பரம் செய்யப்பட்டு சேவை வழங்கப்படுகின்றது.
வரிசையில் காத்திருப்பதற்காக 17 முதல் 50 டொலர்கள் வரையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிலர் வரிசையில் காத்திருப்பதற்காக 100 டொலர்கள் வரையில் அறவீடு செய்கின்றனர்.
கனடாவில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்ற போதிலும், எதிர்வரும் ஜூன் மாதம் வரையில் முன்பதிவு செய்து கொள்ள முடியாத அளவிற்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் 1273000 கடவுச்சீட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விடவும் 250 வீதம் அதிகரிப்பாகும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.