மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை! எந்த நாட்டில் தெரியுமா?
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள மாவட்டம் புடோங். இந்த மாவட்டத்தில் முன்னணி நிதி நிறுவனங்கள், ஷாங்காய் பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் தாங்கள் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள நடைபாதை, கேரேஜ் மற்றும் திறந்த வெளி பகுதியில் நடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காய் மாநகராட்சி சுகாதார கமிஷன் அதிகாரி வு குயியான்யு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை புதிதாக கொரோனா பாதிப்பு 4477 என அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.