கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர்
கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட ஆண் மற்றும் பெண் தொடர்பில் ஹாலிஃபாக்ஸ் பிராந்திய பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
சனிக்கிழமை மதியம் ராபி தெருவில் 1300 தொகுதியில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட தகவல் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் ஆபத்தான நிலையில் பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவ பகுதியில் இருந்து திரும்பிய பொலிசார், வழியில் இன்னொரு ஆண் கத்திக் குத்து காயங்களுடன் அவதிப்படுவதை கண்டுள்ளனர்.
தொடர்ந்து அவரையும் மீட்டு, அவசர மருத்துவ உதவிக்குழுவினரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த இரு விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.