விருந்து கொண்டாட்டத்தில் துயரம்: பெண்கள் உட்பட மூவரின் நிலை பரிதாபம்
மிசிசாகா பகுதியில் 100 பேர்கள் கலந்து கொண்ட ஒரு விருந்து கொண்டாட்டத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
Hurontario தெருவில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 8.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணமுடியாமல் தடுமாறியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் தாமாகவே பொலிசாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பொலிசார் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களில் மேலும் இருவரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் மூவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும், சம்பவயிடத்தில் அச்சுறுத்தலாகவோ, அல்லது அங்கிருந்து வாகனம் ஏதும் தப்பியதாகவோ தகவல் இல்லை என்றே பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
100 பேர்கள் கலந்து கொண்ட அந்த விருந்து கொண்டாடத்தில் இருந்து, 8 பேர்கள் வெளியேறியதாக பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், அந்த விருந்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் விசாரணை முன்னெடுக்கப்படும் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.