இந்திய இளைஞருக்கு கனடாவில் கிடைத்த மகிழ்ச்சி தகவல்
நிரந்தர வதிவிடத்தைப் பெறும் நோக்கில் கனடாவில் இந்திய இளைஞர் ஒருவர் முன்னெடுத்த முயற்சிகள் பல மாதங்கள் தாமதத்திற்கு பின்னர் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தியரான 25 வயது அரவிந்த் ஷாஜு கடந்த 2017ல் மாணவராக கனடாவுக்கு வந்துள்ளார். ஆனால் நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்காக அவர் அளித்த விண்ணப்பம் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில், அவர் சட்டத்திற்கு உற்பட்டு பணியாற்ற முடியாமல் போனது.
லண்டனில் அமைந்துள்ள Fanshawe கல்லூரியில் பொறியியல் பட்டம் முடித்த ஷாஜு 2020 ஏப்ரல் மாதம் விண்ணப்பம் அளித்துள்ளார். அப்போது அவருக்கு 6ல் இருந்து 8 மாதங்கள் வரை அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருக்க நேரிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் ஷாஜு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஷாஜு போன்று வதிவிடத்தைப் பெற விண்ணப்பித்த பலர் இதனிடையே டுவிட்டர் பக்கத்தில் தங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்கோ ஈ. எல். மெண்டிசினோ குறித்த விவகாரம் தொடர்பில் பதிலளித்துள்ளார்.
அதில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவே தாமதமானதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் துரித நடவடிக்கை முன்னெடுக்க ஆவன செய்யப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து ஷாஜு உள்ளிட்ட பலருக்கு நிரந்தர வதிவிட உரிமம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குடியுரிமை கேட்டு அடுத்து விண்ணப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.