வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நபர்: ஸ்கேன் செய்து பார்த்த போது அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்
கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் 2000 ம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை விழுங்கியுள்ளார்.
செல்போனை விழுங்கியதால் தொடர்ந்து கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது வயிற்றில் செல்போன் உடைந்து மூன்று பாகங்களாக இருந்துள்ளது.
அதையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற அவரை வைத்தியர் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி எடுத்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 2 மBi நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.
பிறகு, வைத்தியர் டெல்ஜாகு தனது முகநூலில் தொலைபேசியின் புகைப்படங்களையும், மனிதனின் வயிற்றுக்குள் இருந்தபோது எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி படங்களையும் பகிர்ந்துள்ளார்.
மேலும் மொபைலின் பேட்டரி குறித்து தான் எங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது, ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக் கூடும்" என்று அவர் கூறினார்.