ரொறன்ரோவில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவருக்கு நேர்ந்த சோகம்!
ரொறன்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் ரொறன்ரோவின் டப்ரீன் வீதி மற்றும் ஸ்டீலீஸ் வீதிகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்கள் காயமடைந்த இருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற வீதி மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.