ரொறன்ரோ ரயில் விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் இடம் பெற்ற ரயில் விபத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சரக்கு ரயில் ஒன்றில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ரயில் விபத்து ரோஸ்டேல் வீதியின் ஆஸ்டலி மற்றும் ஸ்டாண்டிஸ் அவென்யூ பகுதிகளில் நேற்றைய தினம் இரவு 10 மணியளவில் இந்த ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த ரயில் விபத்து சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த விபத்தை தொடர்ந்து அந்தப் பாதையில் பயணம் செய்ய வேண்டிய சில சரக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் இவ்வாறு ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டது.
இந்த ரயில் விபத்து தொடர்பில் சந்தேகங்கள் எதுவும் எதுவும் கிடையாது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.