கனேடிய சுகாதாரத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்த பைசர் நிறுவனம்
சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்குமாறு பைசர் கொரோனா தடுப்பூசி நிறுவனம் (Pfizer Vaccine Company) கனேடிய சுகாதாரத் திணைக்களத்திடம் கோரியுள்ளது.
5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர் சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுகொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து பைசர் நிறுவனம் சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளது. Comirnaty என்ற பெயரில் இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பைசர் நிறுவனத்தின் கோரிக்கை முன்னுரிமை அளிக்கப்பட்டு கவனம் செலுத்தப்படும் என கனேடிய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.