பங்களாதேக்ஷை உலுக்கிய விமான விபத்து; தனியார் கல்லூரி வளாகத்திற்குள் 19 பேர் பலி!
வங்காளதேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், இன்று (21) வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில் விபத்துக்குளானதில் 19 பேர் பலியானதுடன், 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
இன்று , மதியம் 1.06 மணியளவில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து டாக்காவில் உள்ள உத்தாரா பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்து நடந்த சமயத்தில் கல்லூரியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விமான விபத்து பெரும் பரப்ரப்பி ஏற்படுத்தியுள்ளது.