ஓடுதளத்தை விட்டு வெளியேறி ஏரியில் பாய்ந்த விமானம்: பிரான்சில் சம்பவம்
பிரான்சில் விமானம் ஒன்று ஓடுதளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானதை அடுத்து, Montpellier விமான நிலையம் மூடப்பட்டது.
செப்டம்பர் 24ம் திகதி சனிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 2.30 மணி அளவில் Montpellier நகர விமான நிலையத்துக்கு Boeing 737 சரக்கு விமானம் வந்தடைந்தது.
விமானம் தரையிறங்கி ஓடுதளத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. குறித்த விமானமானது ஓடுதளத்தை விட்டு வேகமாக விலகி அருகில் உள்ள Mauguio ஏரியில் தொட்டும் தொடாமல் சென்று நின்றது.
ஆனால், விமானத்தின் முகப்பு பகுதி ஏரியில் முட்டி நின்றுள்ளது. குறித்த விமானத்துக்குள் மூவர் மட்டுமே இருந்துள்ளனர். மேலும் அதிர்ஷ்ட்டவசமாக அவர்கள் காயமடையவில்லை என்றே தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை அடுத்து, அன்றைய நாளுக்கான அனைத்து விமான சேவைகளையும் Montpellier விமான நிலையம் நிறுத்தியுள்ளது. மட்டுமின்றி, விமானம் ஓடுபதையை விட்டு விலகிச் சென்றது ஏன் என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.