சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைந்த விமானத்தால் பரபரப்பு!
சுவிட்சர்லாந்துக்குள் எல்லை தாண்டி நுழைந்த சிறிய விமானம் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்லதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நேற்று காலை, பிரான்சிலுள்ள Colmar என்ற இடத்தில் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு கட்டுப்படாமல் சிறிய ரக விமானம் ஒன்று பறந்துவருவதாக பிரெஞ்சு அதிகாரிகள் சுவிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
அதற்குள் அந்த விமானம் எல்லையைக் கடந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக, Vaud மாகாணத்திலுள்ள Payerneஇலிருந்து வேகமாக புறப்பட்ட சுவிஸ் விமானப்படையின் ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை Graubünden பகுதியில் மடக்கியுள்ளன.
விமானத்தின் விமானியைத் தொடர்புகொண்ட சுவிஸ் அதிகாரிகள், அந்த விமானத்தை இத்தாலி விமான எல்லைக்குள் கொண்டு செல்ல பணித்ததுடன் , விமானியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாகவும் கூறப்படுகின்றது.